23.3.10

புரிதல்களின் தவறு வலியானதே .........



















உனக்கும் எனக்குமான
உறவின் புரிதல்கள்.....
நீண்ட காலங்களென -நீ
நிச்சயமாய் மறுக்க முடியாதவை

எத்தனையோ மனிதர்களை
எதிர்கொண்ட என் வாழ்வில்
உனை மட்டும்
கணக்கிடத் தவறியதன்
காரணம் தேடுகின்றேன்....

உலகம் என் முதுகை
வியப்போடு தட்டுகிறது...
உனக்கும் இந் நிலையா??????
வார்த்தைகள் வரமறுக்க
தலையை மட்டும்
மௌனமாய் அசைக்க
தள்ளிவிட்டாய் என்னை !!!!!

மறந்திடு என்று
சுகமாய் விலகினாய்
நீ பகிர்ந்த காதல்,.........
நீ தந்த முத்தம்..........
அத்தனையும் என்ன செய்ய????
பத்திரமாய் உடலோடு காவுகின்றேன்...
ஏனெனில்.................
உனக்கு திருப்பி அளித்திட...!!!!!

என் நெஞ்சத்துள்
நிறைத்து வைத்து
யாசித்த காலங்கள்.......

இதய இடுக்கைக்குள்
அடுக்கி வைத்த ஆசைகள்......

தூங்கும் இரவுகள் முழுதும்
தின்றுவாழும் உன் நினைவுகள்......

தூக்கத்தையே தொலைத்து
புரண்டு புரண்டு
படுத்த சாமங்கள்.....

காற்சட்டைக்குள் பத்திரப் படுத்திய -உன்
காகித கிறுக்கள்கள்....-அதை
அடிக்கடி புரட்டிப் பார்த்த
நிமிடங்கள்............

சாவின் விளிம்பைத் தொடுகையில்
உன்னை நினைத்தே
தப்பித்த பொழுதுகள்.....

தொலை பேசியே பேசமுடியாத
தொலைவில் வாழ்ந்த போதும்
கிடைக்கும் அரிய வாய்ப்புகளில்
பத்துமாதம் சுமந்தவளை தவிர்த்து
உன்னோடு மட்டும் உரையாடிய நேரங்கள்....

இப்படி இப்படி எத்தனையோ...
அத்தனையும் புரட்டுகையில்
இழந்து போன காலத்தை
எண்ணி எண்ணி வெம்புகின்றேன்...
















நீ அனுப்பிய

நினைவுப் பரிசுகள்....

பிரியங்கள் பகிர்ந்த
காகித மடல்கள்...-உன்

நிழற்படங்களைத் தாங்கிய
சேகர ஏடுகள்.........

சேகரித்து வைத்த
என் கரங்கள்....

எனை அறியாமலே
விறு விறுக்கின்றன !!!!!

எரிக்க எடுத்த
தீக்குச்சியின் பெருஞ்சீற்றம்
வழமைக்கு மாறாய்......
எரிவின் வெட்பத்தால்
பிரபஞ்சமே பொசுங்கி விடுவதாய்
வெஞ்சினத்தோடு எரிந்தன....

உன் நிராகரிப்பிற்கான
காரணம் மட்டும்
இன்று வரை புரியவில்லை
இதற்கான மறுதாக்கம்
ஓர் நாள்.......
வாழ்க்கை வலிக்கையில்
நீயாகவே புரிந்து கொள்வாய் ...!!!!!!!!!

செம்பகம்


நண்பனின் உண்மைச்சம்பவத்தை வரிகளாக்கினேன்.


























25 comments:

  1. :)

    நல்ல முயற்சி

    வாழ்த்துகள் விடிவெள்ளி

    ReplyDelete
  2. யார் பிரிய நேர்ந்தாலுமே, பிரிவு துயர் கொடுமை. அதுவே காதலனானால் கொடுமையிலும் கொடுமை.

    ReplyDelete
  3. ம்ம்.....பிரிவின் வலியை சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
  4. நல்லா இருக்குதுங்க.. நல்ல வடிவம் கவிதைக்கு.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பிரிவு எப்பவும் வலி தான்
    நல்லா இருக்கு விடிவெள்ளி

    ReplyDelete
  6. பிரிவின் வலியின் வழியில் ஆழமாய் போகிறது கவிதை வாழ்த்துகள்...விடிவெள்ளி

    ReplyDelete
  7. பிரிவு கொடுமையில்லை ஏனென்றூ தெரியாததுதான் கொடுமை..


    அருமை விடிவெள்ளி

    ReplyDelete
  8. அருமையான கவிதை விடிவெள்ளி..! பரிவு வலிதான் என்றாலும், வலியால் கவிதை கிடைத்ததால், அந்த பிரிவுக்கு நன்றி!

    தொடர்ந்து எழுதுங்கள்..!

    -
    DREAMER

    ReplyDelete
  9. நேசமித்ரன் அவர்களே உங்கள் தொடர்
    வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.....

    ReplyDelete
  10. தமிழ் உதயம் அவர்களே
    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
    எனது மனமார்ந்த நன்றிகள்.....

    ReplyDelete
  11. சே.குமார் அவர்களே உங்கள் தொடர்
    வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.....

    ReplyDelete
  12. இராமசாமி கண்ணண் அவர்களே
    உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்
    எனது மனமார்ந்த நன்றிகள்.....

    ReplyDelete
  13. சைவகொத்துப்பரோட்டா said...
    ம்ம்.....பிரிவின் வலியை சொல்லி விட்டீர்கள்

    சைவகொத்துப்பரோட்டா அவர்களே
    உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்
    எனது மனமார்ந்த நன்றிகள்.....

    ReplyDelete
  14. Sivaji Sankar said...
    நல்லா இருக்குதுங்க.. நல்ல வடிவம் கவிதைக்கு.. வாழ்த்துக்கள்

    Sivaji Sankar அவர்களே
    உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்
    எனது மனமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  15. padma said...
    பிரிவு எப்பவும் வலி தான்
    நல்லா இருக்கு விடிவெள்ளி

    padma அவர்களே
    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
    எனது மனமார்ந்த நன்றிகள்.....

    ReplyDelete
  16. seemangani said...
    பிரிவின் வலியின் வழியில் ஆழமாய் போகிறது கவிதை வாழ்த்துகள்...விடிவெள்ளி

    seemangani அவர்களே
    உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்
    எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  17. thenammailakshmanan said...
    பிரிவு கொடுமையில்லை ஏனென்றூ தெரியாததுதான் கொடுமை
    thenammailakshmanan அவர்களே
    அது தானே தெரியவில்லை......

    seemangani அவர்களே
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
    எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  18. வானம்பாடிகள் said...
    good!

    வானம்பாடிகள் அவர்களே
    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
    எனது மனமார்ந்த நன்றிகள்.....

    ReplyDelete
  19. DREAMER said...
    அருமையான கவிதை விடிவெள்ளி..! பரிவு வலிதான் என்றாலும், வலியால் கவிதை கிடைத்ததால், அந்த பிரிவுக்கு நன்றி!

    தொடர்ந்து எழுதுங்கள்..!

    DREAMER அவர்களே
    சரியா சொல்லியிருக்கிறீங்க.......\
    தொடர்ந்து எழுதுகிறேன்
    தொடர்ந்து வாருங்கள்.....

    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
    எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  20. குட்டிக்கவிதை எழுதுங்க பாஸ்!

    தாவூதீருது!

    ReplyDelete
  21. அப்பப்பா எத்தனை வலி இந்த பிரிதலில். அந்த புரிதலை தொலைக்கவும் முடியுமா என்ன? சாதரணமான வார்த்தைகள் அல்ல பிரிந்து விடுவோம் என்பது, ரணம் தோய்த்த வார்த்தைகள். அற்புதமாய் செதுக்கி உள்ளீர்கள் விடிவெள்ளி. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. வால்பையன் said...
    குட்டிக்கவிதை எழுதுங்க பாஸ்!

    தாவூதீருது
    வால்பையன் அவர்களே சரி சரி எழுதுகின்றேன்....
    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
    எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  23. காவிரிக்கரையோன் MJV said...
    அப்பப்பா எத்தனை வலி இந்த பிரிதலில். அந்த புரிதலை தொலைக்கவும் முடியுமா என்ன? சாதரணமான வார்த்தைகள் அல்ல பிரிந்து விடுவோம் என்பது, ரணம் தோய்த்த வார்த்தைகள். அற்புதமாய் செதுக்கி உள்ளீர்கள் விடிவெள்ளி. வாழ்த்துக்கள்!

    காவிரிக்கரையோன் அவர்களே உங்கள் கருத்திற்கும், ஊக்கத்திற்கும், முதல் வருகைக்கும் மிக மிக நன்றி.
    தொடர்ந்து வாருங்கள் கவிதைகள் காத்திருக்கும்..

    ReplyDelete