1.10.11

இறக்கவைத்து, இறந்துபோன நம்பிக்கை...




பாகம் 1





















அகதி என்று
பெயர் தாங்கி
பெயர்ந்தோம்....
இன்றும் !!
அகதியென்றே பொறிக்கப்பட்டு
அலைகிறோம் நாடெல்லாம்.......

எங்கள் நிலம்
எங்கள் உரிமை
எமக்கு வேண்டும்.........
பேசினோம் பேசினோம்
முறை பலதாய்
பேசினோம் ...
செவிகளில் ஏற்றிடாத
செவிடர்கள் ஆனார்கள் ..

செவிப்பறை உடைய
சங்கெடுத்து ஊதினோம்..
எதிர்திசையாய் சங்கோடு
எமையழிக்க வந்தார்கள்..
பலமோடு பலமாக
பிரபஞ்சமே அதிர
பறைசாற்றினோம் பாரெல்லாம்..

உரிமை கேட்டு
வலிமை பெற்று
உயரப் பறந்தோம்..
வியந்து பார்க்க மட்டுமே -உலகின்
விழிகள் இருந்தது-தமிழர்
நீதியின் பக்கம்
தலைசாய்க்க தலைகள்
நேர்மையற்று கிடந்தது..

தொப்புள் கொடி
உறவென்று நம்பினோம்...
தொப்பை அறுத்து
சதிசெய்தது மட்டுமே
அவர்களின் கதை..

ஆலமர ஆணிவேராய்
ஆழவேரோடிய நம்பிக்கை-ஒவ்வோர்
தமிழர் மூச்சுள்ளும்
தலை நிமிர்ந்து நின்றது..

வெல்வோம் உரிமையை
கட்டுவோம் அரசொன்று..
பறப்போம் சுதந்திரமாய் -என
வருடங்கள் முப்பதும் தாண்டி
வளர்த்துக் கொண்டோம்..

துளி ஒன்றேனும்
துளிர் விடவில்லை-எம்
நம்பிக்கை மீதான
ஐயங்கள் என்று!!!

உண்மைகள் புரிந்து
கைகொடுக்கும் உலகென்று
கடைசி வரையும்
கனவு கண்டோம்..
இறுதி வரையும்
உறுதி கொண்டோம்..


















அதனாலே.....
நிகழ்பவை எல்லாமே
நிரந்தர விடுதலைக்கே -என
சகிக்கமுடியாத கொடுமைகளையும்
சமாளித்து வாழ்ந்தோம்
நாளை எமகென்றே...

இழந்தோம் அத்தனையும்
நம்பிக்கை வைத்தே-பின்னே
நம்பிக்கையே இறந்துபோனது!!!


தொடரும்.....

செம்பகம்..