23.2.10

எதற்கான போர்ப்பு














தமிழர் உயிர்களின்

அழிப்பிற்கானதா........?

அடைத்து வைத்து தமிழரை
அட்டகாசம் செய்வதற்கானதா....?
அப்பாவி மக்களின்
அழுகைக்கானதா.......

தாகந்தீர்க்க தண்ணீரின்றி
தவிக்க வைக்கும்
கொடுமைக்கானதா.....?

நோயாலே நித்தமும் தமிழர்
வாடுவதற்கானதா.......?

பெற்றோரை இழந்த
உற்றோரைப்பிரிந்த
அனாதைகளாய் அலையவைத்த
அக்கிரமத்திற்கானதா.........?

கொதிக்கிறது இரத்தம்!!!!!!
படுகொலையின் நாயகனுக்கு
பொன்னாடைப் போர்ப்பா?
காரணம் தான் புரியவில்லை


செம்பகம்

No comments:

Post a Comment